புனித செபஸ்தியாருக்கு 7 மன்றாட்டு
1.பிதாவின் சித்தத்தினாலே உயர்ந்த குடும்பத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து எண்ணிலடங்காத பண்ணிய நன்மைகளைச் செய்து வேதத்துக்காகத் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக படையில் சேவை செய்தவரான புனித செபஸ்தியாரே, சத்திய திருச்சபையார் எல்லாரையுஞ் சகல பொல்லாப்பக்களிலே நின்று, சர்வேசுரன் இரட்சித்தருள வேணுமென்று பரமகர்த்தர் சந்நிதியில் நீர் மன்றாட வேண்டுமென்று உம்மைப் பார்த்து பிரார்த்தித்துக் கொள்கிறோம் -பர, அருள், பிதா.
2.ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் அநேக அஞ்ஞான இராஜாக்களுக்கும் பிரபக்களுக்கும் சத்திய வேதத்தை பிரசங்கித்து பத்திமதி சொன்னவரான புனித செபஸ்தியாரே, உலகெங்கிலும் பசாசின் ஆராதனை ஒழித்து எல்லோருஞ் சத்திய வேதம் அறிந்து, ஞான தீட்சை பெற்று, திருச்சபைக்கு உள்ளாகத் தக்கதாக, நீரே சர்வேசுரனை மன்றாடும்படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
4.சர்வேசுரனுக்குப் பிரியமாகவும், வேதத்துக்காக துன்பப்படுகிற விசுவாசிகளுக்கு உதவியாகவும், வியாதிக்காரருக்கு தேவகிருபையால் ஆரோக்கியங்கொடுத்த புனித செபஸ்தியாரே! கிறிஸ்தவர்களுக்கு வி;பேதி, வாந்தி, வைசூரி, வியாதியில்லாமல் பரமகர்த்தர் தற்காத்து இரட்சித்தருள வேணுமென்று தேவகிருபை சிம்மாசனத்தில் மன்றாட உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
5.பூலோகமெங்கும் சுகிர்த நாமம் உடைத்தானவருமாய், சத்திய திருச்சபைக்குத் தஞ்சமுமாயிருந்த புனித செபஸ்தியாரே, திருச்சபைக்கு விரோதம் செய்கிறவர்களுக்கு சர்வேசுரன் நல்ல மனதைக் கொடுத்தருளும். இந்த இராச்சியத்துக்கு வேண்டிய சத்திய சற்குருக்களுண்டாகி ஈடேற்ற நெறியில் எங்களை நடப்பிக்கவும் சர்வேசுரனை மன்றாடும் படிக்கு உம்மை பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
6.உலக மகிமை, பெருமை, புகழ், செல்வமெல்லாம் வெறுத்து இயேசுநாதரைப் பற்றிப் பிராணனைத்தர, அத்தியந்த விசுவாசத்துடனே மாற்கு மார்செல்லியனுக்கு பத்தி சொல்லும் போது ஏழு சம்மனசுகளுடன் இயேசுநாதர் வந்து உம்மை முத்தி செய்து நம்மோடுகூட இருப்பாயென்று சொல்லக்கேட்டு சந்தோ;மடைந்த புனித செபஸ்தியாரே, நாங்களெல்லோரும் பாவமில்லாமல் பண்ணிய வழியிலே காங்கோபாங்கமாய் நடந்து பேரின்ப மோட்ச இராச்சியத்திலே சேர்ந்து கர்த்தரிடத்தில் அத்தியந்த கிருபை பெறத்தக்கதாக நீரே அவரை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா
7.உரோமாபரி தியோக்கிலேசியன் என்ற இராயனால் அநேகம் அம்பகளால் எய்யவும், சாட்டை, கசை பெருந்தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டு மோட்ச இராச்சியத்திலே சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேதசாட்சி முடிசூட்டப்பட்டு, உமது திருச்சாீரத்தை அப்போஸ்தலர்களான புனித இராயப்பர் சின்னப்பர் கல்லறைக்கருகே அடக்கஞ்செய்யப்பட்ட புனித செபஸ்தியாரே, திருச்சபையாரெல்லாம் சர்வேசுரனுடைய சித்தத்துக்கேற்ப நடக்கத்தக்கதாகவும் சகல வியாதிகளிலும் எங்களை விலக்கி இரட்சிக்கத்தக்கதாகவும், உமது வேண்டுதலின் பலன் எங்களுக்கு கிடைக்கத்தக்கதாகவும், நீரே சர்வேசுரனை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.- பர, அருள், பிதா.
முதல்; இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத்தக்கதாக.
புனித செபஸ்தியாரே! எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக
கிருபை தயாளம் நிறைந்த சர்வேசுரா சுவாமி! உமது அதி உன்னதமான மகிமை பெற்ற புனித செபஸ்தியார், உமக்காக பட்ட பிரயாசங்களை தேவாீர் பார்த்து அவர் சிந்தின உதிரம் எங்கள் ஆத்தும சாீர நோய்களுக்கு சரியான் ஒள;தமாகத் திருவுளமானீரே, அவரது பேறுபலன்களை பார்த்து எங்கள் ஆத்தும வியாதியிலும், சாீரத்திலும் உண்டாகிற சகலவித வருத்தங்களிலும், வைசூரி, வி;பேதி முதலிய தொத்து வியாதிகளிலும் நின்று நிவாரணமாக்கியருள வேணுமென்று இந்த ஏழு மன்றாட்டுக்களையும் குறித்து உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் சுவாமி -ஆமென்.
தீரா நோய்களை தீர்த்திட வரம் பெற்ற புனித செபஸ்தியாரே கொரோனா ஆபத்திலிருந்து என் வீட்டையும் நாட்டையும் காத்தருள்வீராக ஆமென்.
ReplyDelete