புனித செபஸ்தியாருக்கு புகழ்மாலை


சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா,
எங்களை. . . . .
இஸ்பீரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை. . . . 


வேதசாட்சிகளுக்கு இராக்கினியான புனித மரியாயே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உயர்ந்த குடும்பத்தில் பிரதாப மகிமையான புனித செபஸ்தியாரே,
உமது பிறப்பினால் நற்போன் பட்டணத்தை முக்கியப்படுத்தின புனித செபஸ்தியாரே. . .
இத்தாலி தேசத்தில் அதிசயப்பண்ணிய பிரகாசத்தினால் விளங்கியவரே. . . .
வேதத்துக்காகத் துன்பப்பட்ட விசுவாசிகளுக்கு ஆதரவாயிருக்கப் படையில் சேவித்தவரே. . . . 
அஞ்ஞான இருளில் ஞானக்கதிரால் பிரகாசித்தவரே. . . 
தரித்திரர்களுக்கு உதார தகப்பனாரே. . .
நிர்ப்பந்தங்களுக்குள் தத்தளித்த வேதசாட்சிகளுக்குப் பத்திமதி சொல்லித் திடப்படுத்திப் பிரகதியில் சேர்பித்தவரே. . .
ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் வேத சத்தியங்களைப் பிரசங்கித்தவ்ேர,
அநேக அற்பதங்களால் இயேசு கிறிஸ்துவினுடைய வேத விசுவாசத்தை விளங்கப் பண்ணினவரே. . . .
வாக்கினாலும் கிரிகையினாலும் வல்லவராயிருந்தவரே. . .
சத்தியத்துக்காக உபத்திரவப்பட்டவர்களுக்கு மிகுந்த தைரியத்தை வருவித்தவரே. . . .
வேதசாட்சிகளுக்குத் தங்கள் சோதனைகளிலும் மரணவேளையிலும் பலமும் தேற்றரவுமாயிருந்தவரே. . . .
திடமான விசுவாசத்தினாலும் சுகிர்த ஒழுக்கத்தினாலும் யாவருக்கும் நல்ல மாதிரிகையாயிருந்தவரே. . .
பக்தி நிறைந்த வாக்கியங்களாலும் அநேகர் இருதயத்தில் தேவ சிநேக அக்கினியை மூட்டி வளர்த்தவரே. . .
அஞ்ஞானிகளான அநேகருக்குச் சத்தியத்தை தெளிவித்து ஞான தீட்சை பெறுவித்தவரே. . . .
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பேர்பெற்ற பெரிய உத்தியோகஸ்தர்களை முதலாய் சத்திய திருச்சபையில் சேர்ப்பித்தவரே. . . .
அதிசயமான சகல பண்ணியங்களிலும் தைரிய வீரசூரத்திலும் அதிகரித்தவரே. . .
விசுவாசிகளுக்கு உதவியாக, சக்கரவர்த்தி, உரோமாபரி இராயனிடத்தில் சேனை தலைவராக உயர்த்தப்பட்டவரே. . .
சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் மிகவும் பிரியப்பட்டவரே. . .
சத்திய திருச்சபைக்குத் தஞ்சமானவரே. . .
அர்ச். பாப்பானவருக்கு மிகவும் ஆறுதலும் அகமகிழ்ச்சியுமாயிருந்தவரே. . .
சிலுவை அடையாளத்தில் திமிர்வாதத்தை நீக்கினவரே. . .
ஊமையைப் பேசவைத்தவரே. . .
அநேக வியாதிகளை அதிசயமாகத் தீர்த்து ஆரோக்கியம் தந்த உத்தம வைத்தியரே. . .
எண்ணப்படாத பண்ணிய நன்மை அற்பதங்களைச் செய்தவரே. . .
பசாசுக்களுக்குப் பயங்கரமான சாட்டையாய் இருந்தவரே. . .
உலகம் பசாசு சாீரத்தின் தந்திரங்களையெல்லாம் ஜெயித்தவரே. . 
பாளையத்திலும் அழியாத கற்பினால் விளங்கியவரே. . .
அத்தியந்த விசுவாசத்திடனை உடையவரே. . .
இடைவிடாமல் தேவசிநேக அக்கினியால் எரிந்த ஞானச்சூளையே. .
உலக மகிமை பெருமை ஆஸ்தி சுகமெல்லாம் பறக்கணித்தவரே. .
இயேசுநாதருடைய சிநேகத்துக்காக இராயனுடைய சிநேகத்தையும் அவன் தந்த மேலான உத்தியோகங்களையும் இழந்தவரே. . .
இயேசுநாதரைப்பற்றிப் பிராணனைத்தர மிகவும் அபேட்சித்தவரே. . .
சத்திய வேதத்தை அனுசரித்ததைப் பற்றி இராயனால் மரணத்தீர்வை இடப்பட்டவரே. . .
திரளான அம்பகளால் எய்யப்பட்டவரே. . .
அம்பகளால் ஊடுருவப்பட்டு மரித்தவராக எண்ணி விடப்பட்டவரே. .
உயிர் பிழைத்து மறுபடியும் அதிசய தைரியத்துடன் இராயன் முன்னிலையில் போய் கிறிஸ்தவர்களை வாதித்த அநியாய குரூரத்தைக் கண்டித்தவரே. . .
குரூரம் மாறாத இராயன் கட்டளையால் சாட்டை கசைகளையும் பெருந்தடிகளையும் கொண்டு கொல்லப்பட்டவரே. . .
எவ்வித நிர்ப்பந்தத்துக்கும் அஞ்சாத வேதசாட்சியே. . .
விசுவாசத்தில் ஒருபோதும் தத்தளியாத வேதசாட்சியே. . .
உமது இரக்கத்தால் கிறிஸ்து வேதத்தை மெய்ப்பித்த உத்தம வேதசாட்சியே. . .
மிக தைரிய சந்தோ;த்துடனே வேதத்துக்காக பிராணனைக் கொடுத்தவரே. . .
தரிசனையில் ஏவுதலைப் பெற்ற ஒரு பண்ணிய தலைவியால் மிகுந்த பூச்சியத்துடன் அடக்கம் பண்ணப்பட்டவரே. . .
மோட்ச இராச்சியத்தில் சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேத சாட்சி முடி சூட்டப்பட்டவரே. . .
வேதசாட்சிகளுக்குள் விசே; மகிமைப்பிரதாபத்துடனே பிரகாசித்தவரே. . .
உமது மன்றாட்டின் உதவியால் உரோமாபரி முதலிய பட்டணங்களினின்று கொள்ளைநோய் பெருவாரிக்காய்ச்சல் நீங்கினதால் மிகவும் பேறுபெற்றவரே. . .
பூலோகமெங்கும் சுகிர்தவாசம் பரிமளிக்கிற நாமமுடைத்தானவரே,
சகல கிறிஸ்தவர்களுக்கும் தயை நிறைந்த தகப்பனாரே. . .
வைசூரி முதலிய வியாதி துன்பத்தில்ி ஆதரவும் அடைக்கலமுமாயிருந்தவரே. . .


உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் பருவையாகிய இயேசுவே. . .
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் . . .எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப். . .எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மு; இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு 
நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.

து; புனித செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக



சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா சுவாமி! எங்கள் இக்கட்டுகளையும் பலவீனங்களையும் கிருபையுடனே பார்த்து அடியோர்கள் செய்த பாவங்களின் கனத்தினால் எங்களுக்கு வந்திருக்கிற துன்ப துரித வருத்தங்களின் பேரில் சித்தமிரங்கி புனித செபஸ்தியாருடைய வேண்டுதலினால் எங்களுக்கு வேண்டிய ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும்படியாக கிருபை செய்தருள வேண்டுமென்று தேவாீரைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். - ஆமென்.

Comments

Popular posts from this blog

புனித செபஸ்தியாருக்கு 7 மன்றாட்டு

புனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம்